tamilnadu

பிஎம் கிசான் ஊக்கத்தொகை திட்டத்தில் முறைகேடு: 2 பேர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி, ஆக. 23- பிஎம் கிசான் உதவி தொகை திட்டம்  எனப்படும் விவசாயிகளுக்கான கௌரவ  ஊக்கத்தொகை திட்டத்தில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நடத்திய தொடர் போராட்டத்தின்  விளைவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக மத்திய  அரசு விவசாயிகளுக்கான கவுரவ  ஊக்கத்தொகை திட்டத்தை நடைமுறைப் படுத்தியது. அதன்படி 4 மாதங்கள் இடை வெளியில் தலா 2,000 ரூபாய் என ஆண்டிற்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் துவக்கத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைதுறை மூலம் நடை முறைப்படுத்தப்பட்ட இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வேளாண்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கிறது. பயன் பெற விழையும் விவசாயி களுக்கு அவர்களின் பெயரில் பட்டா, சிட்டா  போன்ற விவரங்கள் அடிப்படை தேவை. மேலும் அவர்களிடம் ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகியவை இருந்தால் அவர்க ளுக்கு கௌரவ ஊக்கத் தொகைக்கு விண்  ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் அரசு மற்றும் அரசுத்துறை ஊழியர்கள், ஓய்வூதி யம் பெறுவோர், முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பயன்பெற இயலாது.

கடைத்தேங்காயை...
இந்நிலையில் மல்லிகா,  ரிஷிவந்தியம், பூ.மாம்பாக்கம், மாடல்  காலனி, பாலி என மாவட்டம் முழுவதும்  பல்வேறு கிராமங்களில் இடைத்தரகர்களாக செயல்படும் சிலர் நிலமில்லாத ஏராளமான பேரை விவசாயிகள் என போலியாக  இத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரை  இத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். இதற்காக "கடைத்தேங்காயை எடுத்து வழிப்  பிள்ளையாருக்கு உடைத்த கதையாக"  கையூட்டாக 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்  வரை பெற்றுள்ளனர். துறை அதிகாரிகள் சிலரின் உடந்தையோடு இதற்கான  ரகசிய கடவுச் சொல், பயனர் குறியீடு ஆகிய வற்றை பெற்று தனியார் கணினி மையங்  கள் மூலம் ("பிஎம் கிசான் சம்மான் போர்ட்டர்)  போலியாக சேர்க்கப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரிய வந்தது.

சிபிஎம் தலையீடு...
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் சின்ன சேலம் 3,867, கள்ளக்குறிச்சி 7,717, கல்வரா யன்மலை 1,577, ரிஷிவந்தியம் 15,929, சங்க ராபுரம் 3,958, தியாகதுருகம் 12,994, திருக்  கோவிலூர் 7,824, திருநாவலூர் 8,913,  உளுந்தூர்பேட்டை 13,977 என மொத்தம்  76,756 பேர் பயனாளிகளாக சேர்க்கப்  பட்டுள்ளனர். இவர்களில் விவசாயிகள்  அல்லாத ஏராளமானோர் சேர்க்கப்பட்டி ருப்பதால் உண்மையான விவசாயிகள் பலர்  விடுபட்டுள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு கட்சியின் சார்பில் மின்னஞ்சலிலும், நேரிலும் பலமுறை மனு  அளித்து முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்" என்றார்.

ஆட்சியர் நடவடிக்கை...
மேலும் கடந்த 17ஆம் தேதி இம்முறை கேடுகளை கண்டித்து கட்சியின் சார்பில் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக மாவட்ட  ஆட்சியர் கிரண்குராலா வருவாய்த்துறை யைச் சேர்ந்த 23 குறுவட்ட ஆய்வாளர்கள்,  தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை களில் உள்ள 16 அதிகாரிகளைக் கொண்ட  குழுக்களை நியமித்து ஒவ்வொரு ஒன்றி யத்திலும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டதோடு இதனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சி யர்கள் கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து 19ஆம் தேதி சங்கராபுரம் பகுதி கிராமங்களான சோழம்பட்டு, மூரார்  பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை மேற்  கொண்டார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ரிஷி வந்தியத்தில் உள்ள ஹன்சிகா பிரவுசிங் சென்டருக்கு நேரில் சென்று அதிரடியாக கணினி உள்ளிட்ட கருவிகளை ஆய்வு செய்தார். இதில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானதால் மையத்திற்கு ஆட்சியர் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கிக்கு நேரில் சென்று பல்வேறு பய னாளிகளின் வங்கி கணக்கை ஆய்வு செய்தார்.

பணியிடை நீக்கம்...
அதனடிப்படையில் வேளாண்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்  பட்டதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் மற்றும் தியாகதுருகம் ஆகிய ஒன்றிய வேளாண்துறை உதவி இயக்குனர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். இத்திட்டத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகள் குறித்து மேலும் பலரிடம் விசா ரணை நடைபெற்று வருவதாக வேளான் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. "தனியார் நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தின்கீழ் வேலைக்கு அமர்த்தப் பட்ட தற்காலிக பணியாளர்களான உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் 7 பேர், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பணிபுரிந்த பயிர் அறு வடை பரிசோதனையாளர் 4 பேர், கணினி தரவு உள்ளீட்டாளர் 2 பேர் என பலர் கடந்த  21ஆம் தேதி முதல் வேலையை விட்டு  நீக்கப்பட்டுள்ளனர். ரகசிய கடவுச் சொல்லை பயன்படுத்தும் அதிகாரம் மாவட்ட இணை இயக்குனர் மற்றும் ஒன்றிய உதவி இயக்குனர் ஆகியோருக்கு மட்டுமே  இருக்கும் நிலையில் கீழ்நிலை தற்காலிக  பணியாளர்கள் மட்டும் பலிகடாக்க ளாக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புகாரின்படி பல உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்க லாம் என்பதால் தொடர்புடைய அனைவரின்  மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ஏழுமலை வலியுறுத்தினார்.

கம்யூனிஸ்டுங்க இல்லனா...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்  தளவில் பிஎம் கிசான் திட்டம், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டம், பயிர் காப்பீடு  திட்டம், விவசாயத்திற்கான நுண்ணீர் பாசன திட்டம், 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் தொடர்ந்து ஊழல், முறைகேடுகள் ஆதாரங்களுடன் அம்பலமாகி வருகின்றன. "நாட்டுல கம்யூ னிஸ்ட்காரங்க இல்லனா இதெல்லாம் எதுவுமே வெளியே வராது" என கிராமப்புற  ஏழை, எளிய மக்களும், "இடதுசாரிகளின் உறுதியான தலையீட்டின் பேரிலேயே இவைகளின் மீது சில இடங்களில் நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என சமூக ஆர்வலர்களும் வெளிப்படையாக தெரிவிப்பதே கம்யூனிஸ்டுகளுக்கான பெரிய அங்கீகாரம் என சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் கூறினார்.