கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 74ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு எடைக்கல், சிறுவத்துர், செம்பியன்மாதேவி, செட்டியந்தல், பூவனுர், கிளியூர் ஆகிய கிராமங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, ஒன்றிய செயலாளர் வி.மார்த்தாண்டன், தலைவர் வேலா. பாலு, நிர்வாகிகள் சங்கர், சேதுபதி, கோகுலகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.