tamilnadu

img

சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து: பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளரான பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் அருகிலிருந்த பேக்கரியிலும் தீ மளமளவென பரவி அங்கிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பட்டாசு கடை உரிமையாளரான கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட செயலாளர் செல்வகணபதி மீது அரசு அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகளை வைத்தது, விபத்து ஏற்படும் என தெரிந்தே அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் நாட்டு வெடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;