சங்கராபுரம், ஜூலை 26- கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டி, விவசாய மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட எல்லை யின் அருகே அமைந்திருக்கும் மூங்கில் துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை, விவசாய பண்ணை, விவசாயக் கல்லூரி உள்ளன. சுமார் 2,000 ஹெக்டேர் நிலப்பரப் பில் விவசாயிகள் விவசாயம் செய்து வரு கின்றனர். இந்த பகுதியில் அதிகளவு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மேலும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் மழைக் காலங்களிலும் சாத்தனூர் அணை திறந்து வரும் தண்ணீராலும், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே தடுப்பணை கட்டுவது குறித்து துறை அதிகாரிகள் பல முறை ஆய்வு செய்து சென்றுள்ளனர். ஆனால் தொடர்ந்து நடவ டிக்கை இல்லை என விவசாயிகள் தெரி விக்கின்றனர். எனவே மூங்கில்துறைப்பட்டு தென் பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.