tamilnadu

img

கடன் வழங்குவதில் பாரபட்சம்: கூட்டுறவு வங்கி முற்றுகை

சங்கராபுரம், ஜூலை 14- கூட்டுறவு கடன் சங்க  நிர்வாகிகள் அரசின் சலுகை களை வாடிக்கையாளர்க ளுக்கு தெரிவிக்காமல், தங்க ளுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குவ தாகக் கூறி வங்கியை பொது மக்கள் முற்றுகையிட்டனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்  நகைக் கடனுக்கு 11 விழுக்  காடு வட்டி இருந்த நிலையில் அரசு 9 விழுக்காடு வட்டி செலுத்தினால் போதும் எனக்கூறி ஒவ்வொரு வங் கிக்கும் ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சங்கரா புரம் வட்டம் அரசம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் இந்த சலுகையை வாடிக்கை யாளர்களுக்கு தெரிவிக்கா மல் வங்கியில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு தெரிந்த வர்களுக்கு மட்டும் வழங்கி வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வங் கிக்குச் சென்று இது குறித்து கேட்டபோது வங்கி யிலிருந்து அவர்களுக்கு முறையான பதில் தெரி விக்காமல் அலட்சியப்ப டுத்தி உள்ளனர்.  இதனால் கோபமுற்ற மக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை தலைமையில் வங்கியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குற்றச் சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தனர்.