சண்டிகர்:
பள்ளிகள் வசூல் செய்யவேண்டிய கல்விக் கட்டணத்தை 70 சதவிகிதமாக குறைத்து, பஞ்சாப் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா தொற்று அச்சம் காரணமாக, பள்ளிகள் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தும் முடிவில்இருப்பதாக தகவல்கள் வெளியாயின. அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாணவர்களிடம் பாடம் நடத்துவதற்கான கட்டணத்தைத் தவிர்த்து வேறெந்தக் கட்டணத்தையும் பள்ளிகள் வசூலிக்கக்கூடாது என்று பஞ்சாப் அரசு கடந்த மே 14அன்று உத்தரவு பிறப்பித் தது.இதுதொடர்பாக சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்குகளில் நீதிபதி ரித்து பெஹ்ரிஇடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி மாணவர் - மாணவியர் கட்டவேண்டிய மொத்தத் தொகையில் 70 சதவிகித பணத்தை மட்டுமே பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிமன்றம், ஆசிரியர்களுக்கும் 70 சதவிகித ஊதியம் வழங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.இவ்வழக்கில் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 12ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.