tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தெருமுனைக் கூட்டம்

கரூர், ஆக.3- புதிய கல்வி வரைவு கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கரூர் ஒன்றிய  செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், பூரணம், டி.என்.பி.எல்.கட்சி கிளை செயலாளர் வேலு, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்   காதர்பாட்சா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். மேலும் பொதுமக்களிடமிருந்து இக்கொள்கைக்கு எதிராக கையெழுத்தும் பெறப்பட்டது.

;