tamilnadu

குளித்தலையில் விரைவில்  புதிய பேருந்து நிலையம் அமையும் அமைச்சர் உறுதி

குளித்தலை, ஆக.3- கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி எனது 25 ஆண்டு களைக் கடந்து நகராட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கி றது. ஆனால் இங்கு நிரந்தர பேருந்து நிலையம் அமை க்கப்படவில்லை. இதனால் 25 ஆண்டுகளாக பொதுமக்கள் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரி க்கை வைத்து வருகின்றனர். தற்போது குளித்தலை புறவழிச்சாலையில் ஸ்ரீ கடம்ப னேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பேருந்து  நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதனை ஆதரிக்கும் வகையில் தமிழக  அரசு தேர்ந்தெடுத்த இடத்தில் பேருந்து நிலையம் அமை த்து குளித்தலை பொதுமக்களின் கோரிக்கையை நிறை வேற்றிட குளித்தலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்தித்த னர். குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும்  பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் பேருந்து நிலை யம் அமைப்பதற்குரிய நடவடிக்கையை எடுத்து வருவதாக வும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் கூறி னார்.