கரூர், நவ.2- தமிழ்நாடு மாநில அமைப்பு தினமான நவம்பர் 1 அன்று அன்னைத் தமிழை அரியணையேற்றுவோம், தமிழ் மொழியை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் தமிழ்மொழி வளர்ச்சி கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் உழவர் சந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் கரூர் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் ஆகியோர் கூட்டத்தில் பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க கும்பகோணம் கிளை சார்பாக தமிழ்நாடு அமைப்பு தினத்தை யொட்டி வெள்ளி மாலை உச்சிப்பிள்ளை யார் கோவில் காந்தி சிலை முன்பு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது. நிகழ்விற்கு கும்பகோணம் நகர தலைவர் அனந்தசயனம் தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, ராஜகோபாலன், பழ.அன்புமணி, சி.சண் முகம், ஆசிரியர் இதய ராஜா, துரைராஜ், வெங்கடேசன் சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கட்சி திருவிடைமருதூர் வடக்கு ஒன்றி யம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வி ற்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவாபாரதி தலைமை ஏற்றார். மாவட்ட குழு உறுப்பி னர் கே.பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் என்.பி.நாகேந்திரன், சொக்கலிங்கம், சேகர் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக முழக்கம் எழுப்பி கொண்டாடினர்.