கரூர், ஜூலை 6- கரூர் மாவட்டம் திருமாநிலையூரை சேர்ந்தவர் சீனிவாசன்(53). இவர் குளி த்தலை நகராட்சியில் துப்புரவு தொழிலா ளராக பணிபுரிந்து வந்தார். இவர் ஜூலை 1 அன்று உடல் நிலை சரியில்லாமல் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மயங்கிய நிலை யில் கிடந்துள்ளார். நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், மேஸ்திரி என யாரும் அவரை கண்டுகொ ள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பேருந்துகள் இயங்காத சூழ்நி லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரா ஜூவிடம் அலைபேசியில் அழைத்து, அவ ருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சீனிவாசனை ராஜூ குளித்தலை நகராட்சி அலுவலகத்திற்க்கு நேரில் சென்று பார்க்கும் போது யாரும் கண்டுகொள்ளாத நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சீனிவாசனின் மேஸ்திரி மற்றும் குளித்தலை நகராட்சி சுகாதார ஆய்வாள ருக்கும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் ஆய்வாளர் எவ்வித அக்கரையுமின்றி தனக்கு மீட்டிங் இருப்பதாக அலட்சியமாக பதில் கூறியது மட்டுமின்றி இறுதி வரை சீனிவா சனை பார்க்க வரவில்லை.
பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ ஆட்டோவில் அழைத்து சென்று குளி த்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகி ச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரி ழந்தார். கொரோன பேரிடர் காலத்தில் அர்ப்ப ணிப்போடு பணி செய்த துப்புரவு தொழிலா ளர்கள் அலட்சியமாக நடத்தப்படுவதை மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், குளித்தலை நகராட்சி நிர்வா கமும், அரசும் துப்பரவு பணியாளர்களுக்கு செய்கிற துரோகம் இது. உடல் நிலை பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர் சீனிவாசனுக்கு உரிய நேர த்தில் சிகிக்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும். நகராட்சி நிர்வா கத்தின் அலட்சியத்தால் இறந்து போன சீனிவாசனின் குடும்பத்திற்கு உரிய நிவா ரணமும், அலட்சியமாக நடந்து கொண்ட குளித்தலை நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர், பகுதி மேஸ்திரி ஆகியோர் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் குளித்தலை ஒன்றி யக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.