கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், குளித்தலை நகருக்கு நிரந்தர பேருந்து நிலையம் இல்லை. தற்போது உள்ள பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இல்லை. போதிய வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.