tamilnadu

கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் முக்கிய செய்திகள்

வெறி நாய் கடித்து 7 பேர் படுகாயம் 
குளித்தலை, அக்.15- கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் செவ்வாய்க் காலை முதல் மதியம் வரை மாற்றுத் திறனாளி பெண் உட்பட 7 நபர்களை வெறி நாய் ஒன்று கடித்துள்ளது. நாய் தொல்லைகள் தொடர்ந்து இருப்ப தால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சத்து டன் உள்ளனர்.  எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் குளித்தலை நகராட்சி அலுவல கத்துக்குள் வரும் வியாழன் காலை 10 மணிக்கு குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் நாய் விடும் போராட்டம் நடத்தப் படும் என்று தெரிவித்தனர்.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் பொதுமக்கள் அவதி 
தஞ்சாவூர் அக்.15- செந்தலைவயல் ஊராட்சியில் குடியிருப்புகளில் சூழ்ந்திருக்கும் மழைநீர் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடற்கரை கிராமம் செந்தலைவயல் ஊராட்சி. இங்கு ஆயி ரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேலத்தெரு பகுதியில் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 300 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால், மேலத்தெரு குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், குடிசை வீடுகளில் வசிப்போர் சமையல் கூட செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் தூங்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீர் காரணமாக கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “ சரியான வடிகால் வசதி இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து ஊராட்சி செய லாளரிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணை யர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி கிழக்கு கடற்கரை சாலை யில் மறியலில் ஈடுபடுவோம்” என்றனர்.

புகார் மீது காவல்துறை அலட்சியம்  ஆட்சியரகத்தில் பெண் தர்ணா 
பெரம்பலூர், அக்.15- மங்கலமேடு காவல்துறையினரை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது உற வினர்களுடன் திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார்.  பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதி யைச் சேர்ந்தவர் அபுதாஹீர் மனைவி லலிதா. மாற்றுத் திற னாளியான இவரிடம், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தும் மாமனார், நாத்தனார், நாத்தனாரின் கணவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மங்கல மேடு காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தாராம். புகார் மனுக்கள் மீது எவ்வித நட வடிக்கை எடுக்காததைக் கண்டித்து, லலிதா அவரது கண வர் அபுதாஹிர், உறவினர்களான ஜாபர் சாதிக், முகமது இக்பால் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தர்னாவில் ஈடுபட்டனர்.  இதையறிந்த தனித் துணை ஆட்சியர் சக்திவேல், தர்ணா வில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தின் பேரில் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர்.

கும்பகோணத்தில் நெகிழி விற்பனை  செய்த கடைகளுக்கு அபராதம்
கும்பகோணம், அக்.15- கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்தால் நட வடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் அறிவித்திருந்தது.  இதன் தொடர்ச்சியாக கும்பகோணம் ஊராட்சி ஒன்றி யம் பாபுராஜபுரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலு வலர் (கி.ஊ) கோ.பூங்குழலி தலைமையில் கடைகளில் நெகிழி (பிளாஸ்டிக்) இருக்கிறதா என ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சிறு வர்த்தக விற்பனை கடைகளில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அபராத தொகை விதிக்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) ஆர்.ராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், ஊராட்சி செயலர் சுதர்சன் ஆகியோர் கொண்ட குழு ஊராட்சி முழுவதும் உள்ள வர்த்தக விற்பனை கடை களில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டு இனி வரும் காலங்களில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருத்தல், பகிர்ந்து அளித்தல் உள்ளிட்ட செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராத தொகை அதிகரிக்கப் படும் என அறிவுரை வழங்கினார்கள். மேலும் வாடிக்கை யாளர்களிடம் கடைக்கு வரும் போது துணிப் பை கொண்டு வர வலியுறுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 
தஞ்சாவூர், அக்.15-பேராவூரணி அருகிலுள்ள சித்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி யில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் ஓவியம் என்ற பிரிவுகளில் பல்வகை கண்காட்சி நடை பெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் பால.சண்முகவேலன் கண்காட்சி யை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சித்துக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செருவாவிடுதி கலைவாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பொக்கன் விடுதி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். ஆயிரக்கணக்கான மாண வர்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.  வட்டார வள மைய அலுவலர் ரகுராமன் மற்றும் பிற பள்ளிகளில் இருந்து வருகை புரிந்த ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி, காலகம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். மேலும் பங்கு பெற்ற அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவாக கண்காட்சி ஒருங்கி ணைப்பாளர் ரா.வழிவிட்டான் நன்றி கூறினார்.