கரூர்: கரூர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினார். மாவட்ட பொருளாளர் சண்முகம் வரவு, செலவு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் சக்தி நாராயணதாஸ் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற சங்க உறுப்பினர் ஜெகதீஸ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்திற்கு மற்ற மாவட்டங்களில் உள்ளது போல் தனியாக ஒரு அறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை ஊழியர் சங்கத்திற்கு அறிவிப்பு பலகை வைக்க அனுமதி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.