tamilnadu

img

செ.ஜோதிமணிக்கு ஆதரவாக கரூரில் சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

கரூர், ஏப்.14-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிகரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணியை ஆதரித்துவாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக்குழு சார்பில் நொய்யல் குறுக்கு சாலை, வேலாயுதம்பாளையம், மரவாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, செயற் குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மூத்த தலைவர் சண்முகசுந்தரம், தொழிற்சங்க தலைவர் சாம்பசிவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அ.காதர்பாட்சா, கா.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் கே.சண்முகம், கிளைச் செயலாளர்கள் கவிஞர் கந்தசாமி, மறவை குணசேகரன், காங்கிரஸ் கமல்ராஜ், திமுக தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால் உள்ளிட்டோர் வாக்குகள் சேகரித்து உரையாற்றினர்.கிளைச் செயலாளர்கள் வேலு, ஈஸ்வரன்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூரணம்கிருஷ்ணமூர்த்தி, பரமேஸ்வரன், போக்குவரத்து அரங்கத்தின் சார்பாக சிரும்பணன், சோமசுந்தரம், செந்தில், சரவணன், மின் அரங்கம் சார்பாக மதியழகன், தனபால், புகளூர் காகித ஆலை தோழர்கள் நடராஜன், இளங்கோவன், செல்வன், ராமசுப்பு, சக்திவேல், ரவிச்சந்திரன், பெரியசாமி, அரவிந்த், கதிர்வேல், மதியழகன், பழனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் வேட்பாளர் செ.ஜோதிமணி, கரூர்நகராட்சி பகுதி உழவர் சந்தை, ஜவகர் பஜார்,வஉசி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.மாவட்ட திமுக பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி, திமுக மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;