tamilnadu

img

கலைத் திருவிழா போட்டிகள் பரணி பார்க் கல்விக் குழுமம் சாம்பியன்

கரூர், நவ.19- கரூர் மாவட்ட அளவிலான “எக்ஸ்ட்ரா வேகன்ஸா” கலைத் திருவிழாவில் பரணி பார்க் கல்விக்குழுமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி  பெற்று அபார சாதனை படைத்தனர். கர்நாடக சங்கீத போட்டியில் பரணி பார்க் மாணவி சான்ட்ரா முதலிடமும், அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் பரணி பார்க் இரண்டா மிடமும், தமிழ் கட்டுரைப் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி மிதுளாஸ்ரீ முதலிடமும், பரணி பார்க் மாணவி வைபவி இரண்டா மிடமும் பெற்றனர்.  ஆங்கில கட்டுரைப் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி ஆபியா மூன்றாமிடம் பெற்றார். குழு நடனத்தில் பரணி பார்க்  முதலிடமும், பரணி வித்யாலயா இரண்டா மிடமும் பெற்றது. ஓரங்க நாடக போட்டியில் பரணி பார்க் முதலிடமும், பரணி வித்யாலயா  மூன்றாமிடமும் பெற்றது. தனி நபர் இசைக் கருவிகள் வாசித்தலில் பரணி பார்க் மாணவி இந்துஸ்ரீ மூன்றாமி டம் பெற்றார். மேலும் பரணி வித்யாலயா பள்ளி மாணவி காவ்யா “மிஸ் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பட்டம் வென்றார். போட்டியில் புள்ளிகள் அடிப்ப டையில் பரணிபார்க் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்முதலிடமும், பரணி வித்யா லயா பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் மூன்றாமிடமும்  பெற்றது. மாவட்ட கலைத் திருவிழாவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்  மற்றும் “மிஸ் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பட்டம் வென்ற பரணி பார்க் கல்விக்குழும மாணவ, மாணவிகளை தாளாளர் மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பள்ளியில் நடந்த விழாவில் பாராட்டி வாழ்த்தினர்.