tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை முற்றிலும் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கருர், ஆக.24-  அனைத்து வாகன ஓட்டுனர்கள், இருசக்கர, கனரக பழுது பார்ப்போர், உதிரி பாகங்கள் விற்பனை செய்வோர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி, அரசு போக்குவரத்து போன்றவற்றில் பணி புரிவோரின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை முற்றிலும் கைவிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்டோ, டாக்ஸி, டெம்போ  ஓட்டுநர்கள்(சிஐடியு) சங்கத்தின் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன் கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி, ஹோச்சுமின், தண்டபாணி, பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, முத்துசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.