tamilnadu

img

கபடியே உயிர் மூச்சு! - சி.ஸ்ரீராமுலு

கபடி விளையாட்டில் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து சாதித்து வரும் மதுரை வீராங்கனை குரு சுந்தரி, இந்த இடத்தை அடைவதற்கு கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல.

ஆரம்பமே அசத்தல்...

ஆண்களுக்குக்கான விளையாட்டாக பார்க்கப் படும் கபடி விளையாட்டில் பெண்களை அனுமதிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. சிறுவயது முதல் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசு களை குவித்தார். அவரது திறமை ஊக்கப்படுத்தி முறைப்படி பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர்.பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்திலும் கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி மேல் வெற்றி பெற்றார். உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த குருசுந்தரிக்கு தமிழக அணியில் இடம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்துக் காட்டினார். தேசிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.  இதனால் 4 முறை தமிழக அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

ஓயாத அலைகள்...

உள்ளூரில் மண் தரையில் கபடி விளையாடி வந்த 27 வயதாகும் குருசுந்தரிக்கு சர்வதேசப் போட்டிகளில் செயற்கை தரையில் (மேட்) விளையாடுவது புது அனுபவமாகும். கடந்த ஜூலை மாதம் மலேசியாவில் நடந்த உலக கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் இந்திய அணிக்காக களம் இறங்கினார் இந்த தொடரில் நமது அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.இந்தப் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரே வீராங்கனை குரு சுந்தரியே.

அடையாளம்...

கோபாலசாமி-சுப்புலட்சுமி தம்பதியின் மூத்த மகள் குருசுந்தரி. உடன்பிறந்தவர்கள் இரண்டு சகோ தரிகள். குடும்பம் ஏழ்மையானாலும் மகள்களை படிக்க வைப்பதில் பெற்றோர் விடாப்பிடியாக இருந்தனர். மேல் நிலைப் பள்ளி வரைக்கும் படித்ததெல்லாம் மாநகராட்சிப் பள்ளி தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது விளையாட்டாக விளையாடிய தொடங்கிய கபடி விளையாட்டு இன்றைக்கு அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. விளையாட்டு மட்டுமல்ல படிப்பிலும் படு சுட்டியான குரு சுந்தரி எம்ஏ, எம்பில் பட்டம் முடித்ததும் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இத னால் கபடி வாழ்க்கை முடிந்துவிடுமோ என பயம் அதி கரித்திருக்கிறது. ஆனாலும் அவருடைய பயிற்சியா ளர்கள் தேவாவும், ஜனாவும் பக்கபலமாக நின்றனர். பயிற்சியாளர்களின் ஆலோசனையின் பேரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். அதில் கிடைத்த வருமானம் குடும்பத்திற்கு பெரிதும் உதவி செய்ததால் பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில் கபடி பயிற்சியை தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில்தான் அரசாங்க வேலை கிடைத்தது. வனக்காப்பாளர் பணிக்கான பயிற்சியில் இருக்கும்பொழுது உலகக் கோப்பை கபடி போட்டிக்கான இந்திய அணி தேர்வில் பங்கேற்க அழைப்பு வந்தது. அரியானாவில் நடந்த அந்த பயிற்சியில் கலந்துகொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்த தோடு ஊக்கமும் அளித்துள்ளனர். இதன் மூலம் விளை யாட்டுத் துறையில் அவரது திறமை அடையாளபட்டது. இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற அவரது நீண்டநாள் கனவும்  நிறைவேறியது. நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்.

வலி நிறைந்த பயணம்...

கிரிக்கெட் உள்ளிட்ட சில விளையாட்டுகளுக்கு கிடைக்கும் தனியார் ‘ஸ்பான்சர்’ கபடி விளையாட்டுக்கு கிடைப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு கிடைப்பது என்பது அரிதிலும் அரிது. அத்தகைய தடைகளையும் சோதனைகளையும்  தவிடு பொடியாக்கி 15 ஆண்டு  காலமாக கபடி தான் தனது உயிர் மூச்சு என்று விளை யாடி வரும் குரு சுந்தரிக்கு அவரது பயிற்சியாளர்களும், பெற்றோரும் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வந்தனர். இந்திய அணியில் இடம் கிடைத்ததும் மதுரையில் முகாமிட்டு இருந்த போதும் இந்திய அணியின் முதல்  முறையாக விளையாடப் போகிறோம் என்ற சந்தோ ஷத்தில் இருந்த தருணம் அவரது வாழ்வில் மிக துயரமான சம்பவம் நிகழ்ந்தது.

குரு சுந்தரியை இந்திய அணியின் உடையில் பார்க்காமல் ‘உயிரை’ விட மாட்டேன் ஆசைப்பட்ட அவ ரது பயிற்சியாளர் ஜனா மாரடைப்பால் மரணமடைந்த இந்த செய்தியைக் கேட்டதும் உடைந்து போனார். அவ ரது உடலைக் காண தயாரான போது பலரும் அவரைத் தடுத்து நிறுத்தி விளையாட்டில் கவனம் செலுத்த திருப்பி அனுப்பினர். அந்த மன வலியோடு  இந்திய அணியில் விளையாடினார்.தனது பயிற்சியாளர் கூறி யதை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு விளையாடி  கோப்பையை வென்ற இந்திய அணியில் தானும் ஒரு கருவியாக இருந்தது வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாகும். கபடி விளையாட்டில் கை, கால் அடிபடு வது சகஜம். அதைப் பார்க்கும் பெற்றோர்கள் தனது மகள்களை அத்துடன் கபடி விளையாட்டு முழுக்கு போட வைத்து விடுவார்கள். கபடி விளையாட வேண்டும் என்ற பெண்களின் ஆசையே அத்துடன் அத்துபோகும். ஆனாலும் தனது விடா முயற்சி கடின உழைப்பால் பல சோதனைகளையும் தடைகளையும் உடைத்தெறிந்து சாதித்து காட்டியிருக்கிறார் குரு சுந்தரி. வட இந்தியாவில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளை யாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கவனம் செலுத்து கிறார்கள். பெண்களும் அதிகமாக விளையாடி வரு கிறார்கள். மாநில அரசுகளும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. அரசும் நிதி உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. ஆனால், தமி ழகத்தில் அது போன்ற நிலைமை இல்லை. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் படிப்பை முடித்ததும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மிக மிக குறைவாகும்.