நாகர்கோவிலில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக மறைந்த தலைவர் டி.லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினர் மனோகர் ஜஸ்டஸ் தலைமை வகித்தார். மாநில தலைவர் எஸ்.நூர்முகமது அஞ்சலி உரையாற்றினார். மாநில பொருளாளர் எம் அகமது உசேன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.அந்தோணி, எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.