tamilnadu

img

டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்புக்கு கண்டனம்

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.5000 வழங்க கோரியும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பத்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குமரி மாவட்டத்தில் கறுப்பு பட்டை அணிந்து வீடுகளில் முழக்கமிட்டனர். இதில் சங்கத்தின் மாநில துணை செயலாளர் உஷா பாஸி, மாவட்ட செயலாளர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.