tamilnadu

img

இடதுசாரிக் கட்சிகள் ஆலோசனை

நாகர்கோவில், ஜூன் 4- இடதுசாரி கட்சிகளின் ஆலோ சனை கூட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலு வலகத்தில் வியாழனன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் ஆர்.செல்லசுவாமி தலை மை வகித்தார். கூட்டத்தில், மாவ ட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், கே.மாதவன், ஏ.வி.பெல்லார்மின், என்.உஷா பாசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், மார்க் சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஐயப் பன், சூசை மரியான் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கோவிட் 19 தொற் றால் பொருளாதாரம், வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் வரும் 9 தேதி யன்று நாகர்கோவில் மாநகரில் செட்டிக்குளம் சந்திப்பு, மீனாட்சி புரம், மாவட்ட ஆட்சியர் அலுவல கம், தலைமை தபால் நிலையம், வேப்பமூடு பூங்கா சந்திப்பு உட் பட மாவட்டம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;