tamilnadu

கன்னியாகுமரி முக்கிய செய்திகள்

தொடரும் மழையால் பொதுமக்கள் அவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

நாகர்கோவில், அக்.12- குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக குமரி மாவட்டத்தில் வெள்ளியன்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இரவு தொடங்கிய மழை  காலையிலும் தொடர்ந்து பெய்து வருவதால்  மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் ஓடுவதால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள்  உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மலையோர பகுதிகளில் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வரும் வெள்ளத்தின் அளவு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 38 மிமீ மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டியில் 25.6 மி.மீ, சிற்றாறு 1 21.1 மிமீ, குழித்துறை 21 மிமீ, பெருஞ்சாணி 19.4 மிமீ, சிவலோகம் 19 மிமீ, கொட்டாரம் 18.4 மிமீ, மயிலாடி 9.6 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து பயணிகள் வேன் மோதி ஒருவர் பலி 
நாகர்கோவில், அக்.12- குமரி மாவட்டம் பாறசாலையிலி ருந்து நாகர்கோவில் நோக்கி ராகேஷ் (19)  மற்றும் அவரது தாயார் சுஜிதா குமாரி (40) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.  இவர்களது வாகனம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது,  மார்த்தாண் தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற பயணிகள் ஏற்றி செல்லும் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சரிந்து ராகேஷின் இருசக்கரவாகனத்தின் மீது மோதி விழுந்தது. இதில் தூக்கி வீசப் பட்ட ராஜேஷ் மற்றும் சுஜிதா குமாரி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக நாகர்கோ வில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ராகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். படுகாயங்களு டன் உயிருக்கு போராடி வரும் சுஜிதா குமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.  இந்த மேம்பாலம் வழியாக போக்குவரத்து காவல் துறை விதிக்கப் பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வேன் வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர். மேலும் தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.