கடலூர், மார்ச் 4- டாஸ்மாக் குடோன்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வேலை செய்யும் சுமைப்பணி தொழி லாளர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை வழங்க வேண்டும், வார விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்புக் கூலி வழங்க வேண்டும், டாஸ்மாக் குடோ னில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு அடை யாள அட்டை வழங்க வேண் டும், அனைத்து சுமைப்பணி தொழிலாளர் களுக்கும் இஎஸ்ஐ, ஈபிஎப் ஏற்ப டுத்திக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோனில் பணி யாற்றும் சுமைப்பணி தொழி லாளர்கள் கடலூரில் கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்யும் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே கோரிக்கையை வலி யுறுத்தி வருகிற 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்துவது என்றும் தீர்மா னித்துள்ளனர். கடலூர் சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் குடோ னில் நடைபெற்ற போராட் டத்திற்கு சங்கத்தின் தலை வர் என்.முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.தண்டபாணி பொருளாளர் ஏ.மணி நிர்வாகிகள் ஆர்.சண்முகம், என்.கருணாநிதி, வெங்கடேசன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் இந்த போராட் டத்தில் கலந்து கொண்டனர்.