tamilnadu

img

வெயிலின் தாக்கம்: பனை விசிறிக்கு வரவேற்பு

கடலூர், மே 31- கடலூர் நகரில் பனை ஓலை விசிறிக்கு  அதிக வரவேற்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து அனல் காற்று வீசுவதோடு, அவ்வப்போது  மின்சாரமும் தடைப்பட்டு வருகிறது.  கொரோனாவிற்கான பொதுமுடக்கத்தி னால் வீடுகளிலேயே முடங்கியுள்ள பொது மக்கள் மிகுந்த வெப்பத்தை  உணர்கிறார்கள். இதனைத் தவிர்த்திட  கையாளப்படும் பல்வேறு வழிமுறைகளில்  முதன்மையிடத்தை விசிறிகள் பிடித்துள்  ளன. அந்த வகையில் பனை ஓலையினால்  செய்யப்பட்ட விசிறிகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் நகரப்பகுதியில் அருகிலுள்ள அன்னவல்லி கிராமத்திலிருந்து தயா ரித்து கொண்டு வரப்படும் விசிறிகள் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அழ கிய வேலைப்பாடுகளுடன் பல வண்ணங்க ளில் விசிறிகள் தயாரிக்கப்பட்டு, நகரத்து  தெருக்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து காமாட்சி என்பவர் கூறு கையில், பல தலைமுறைகளாக  ஓலை விசிறி செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வருகி றோம். சுற்றுவட்டார கிராமங்களில் பனை மரத்திலிருந்து ஓலை எடுத்து வந்து அதனை  பக்குவப்படுத்தி விசிறிக்கான அளவில் வெட்டி எடுத்துக் கொள்வோம். தற்போது  பொதுமக்கள் பல வர்ணங்களில் விசிறியை  விரும்புவதால் பனை ஓலைக்கு சாயமேற்றி  பின்னர் அதன் ஓரங்களில் நூலால் தைத்து  விற்பனை செய்து வருகிறோம். இந்த தொழில் மாதந்தோறும் நடைபெறும் தொழில் கிடையாது. வெயில் காலத்தில் மட்டுமே நடைபெறும். ஒரு விசிறி ரூ.20க்கு  விற்பனை செய்தாலும் பெரியளவில் லாபம்  இருக்காது. வெயிலுக்கு இதமாக பொது மக்கள் இந்த விசிறியை பயன்படுத்தி தங் களை குளுமைப்படுத்திக் கொண்டாலே எங்களுக்கு சந்தோஷம்தான் என்றார்.