tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை சீர் குலைக்கும்  குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நீக்க வலியுறுத்தியும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டியும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வாலிபர் சங்க வட்டச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார் கலந்து கொண்டு குடியுரிமை உள்ளிட்ட சட்டங்களை கொண்டுவந்த பாஜக அரசின் நோக்கங்கள் குறித்து பேசினார்.  மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், காட்டுமன்னார்கோவில்  வட்ட துணைத் தலைவர் தினேஷ்பாபு, மாதர் சங்க வட்டக்குழு ஜெயந்தி, பிச்சம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.