tamilnadu

img

மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

கடலூர், ஜூலை 25- அகில இந்திய விவசாயி கள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் இள.புகழேந்தி, நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் டி.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலா ளர் கோ.மாதவன், வி.சி.க.  நாடாளுமன்ற தொகுதி செய லாளர் பா.தாமரைச்செல் வன், மதிமுக மாவட்டச் செய லாளர் ராமலிங்கம், காங்கி ரஸ் மாநில நிர்வாகி சந்திர சேகரன்,  திராவிட கழகம் மாவட்டத் தலைவர் தென்.சிவகுமார்,  இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி குளோப், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயன், கருப்பையன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவ சிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண்மை விளை பொருட்கள் வணிக ஊக்கு விப்பு அவசர சட்டம், விவ சாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம், ஆகிய வற்றை மத்திய அரசு உடனடி யாக திரும்பப் பெற வலியு றுத்தியும், இதற்காக ஒரு  கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடத்துவது என்றும்  தீர்மானிக்கப்பட்டது. பின்னர்  அனைத்து கட்சியின் நிர்வாகி கள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக் கப்பட்டது.