சிதம்பரம், மார்ச் 2- கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் அய்யனூர் கிராம மக்கள் சிதம்பரம் சாராட்சியரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அதில், கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் அய்யனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதனால் பல ஆண்டுகளாக அவதியடைந்து வருகிறோம். கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் மனுகொடுத்து வருகிறோம். சாராட்சியரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம். எனவே இந்த மனுவின் மீது உரிய விசாரணை நடத்தி மிக விரைவில் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர். கீரப்பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் நெடுஞ்சேரலாதன், ராமச்சந்திரன்,கிளைச் செயலாளர் பாலசுந்தரம், கட்சியினர் ராமயன், ராமமூர்த்தி, ஜெகநாதன், கணேசன், காளிதாஸ், சிங்காரவடிவேல் மற்றும் ஊர் மக்கள் உடனிருந்தனர்.