கடலூர், ஆக. 1- நெய்வேலி சிஐடியு சங்க துணைத் தலைவரும், கூட்டுறவு நாணய சங்கத்தின் தலைவருமான ஆர்.இந்திராவின் தந்தை எஸ்.ராஜன் சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் நெய்வேலி என்எல்சியில் ஓய்வுபெற்ற தொழிலாளி ஆவார். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனை வருக்கும் சிஐடியு சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது உடலுக்கு சிஐடியு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.