tamilnadu

img

செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தல்

சிதம்பரம், நவ. 19- சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாராட்சியரிடம் மனு கொடுத்த னர். சிதம்பரத்தில் கடந்த 16 ஆம் தேதி இரவு நடராஜர் கோயி லுக்கு வழிபடச் சென்ற லதா(51) என்கிற பெண் செவிலி யரை தீட்சிதர் தர்ஷன் என்கிற நடராஜா தாக்கியுள்ளார். இவரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய  வலியுறுத்தியும், சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கைய கப்படுத்தக் கோரியும் சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் சென்ற னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி. ரமேஷ்பாபு,  ராமச்சந்திரன். மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சி நாதன், முத்து. மாதர் சங்க சிதம்பரம் நகரத் தலைவர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.