சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலவச பேருந்து பயண அட்டை வழங்கக் கோரியும் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர்கள் லெனின், ஆகாஷ், கல்லூரி கிளைச் செயலாளர் அபினேஷ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.