tamilnadu

img

பரிசோதனைகளை அதிகரித்திடுக: கடலூரில் 300 மையங்களில் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை 23- கொரோனா பரிசோதனைகளை அதிக ரிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  கடலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கொரோனா  நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ கத்திற்கு மத்திய அரசு ரூ.12,000 கோடி நிதி வழங்க வேண்டும், கொரோனா தொற்றை உறுதிப்படுத்தும் பிசிஆர் பரிசோதனை இயந்திரத்தை கடலூர், விருதாச்சலத்தில் அமைத்து பரிசோதனைகளின் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டும், தொற்று  பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும், தனி மைப்படுத்தப்பட்ட மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்,  பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களைப் பற்றி கவலைப்படாமல் தனியார் கல்வி நிலை யங்கள் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், அரசு ரேஷன் கடைகள் மூலம் இல வசமாக முகக் கவசம், சனிடைசர் வழங்க வேண்டும், மகளிர் காவல் நிலையங்கள், சமூக நலத்  துறையில் கிடப்பில் உள்ள பெண்கள் மீதான  வன்முறை குறித்த மனுக்களை உடனடி யாக விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்  கைகள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கடலூர் நகரத்தில் 31 இடங்கள் உள்ளிட்டு  மாவட்டம் முழுவதும் 300 மையங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் அருகே நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநி லக்குழு உறுப்பினர் கோ.மாதவன், செயற் குழு உறுப்பினர் எம்.மருதவாணன், நகரக்  குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.