சிதம்பரம், ஜூலை 8- கடலூர் மாவட்ட காவிரி டெல்டா கடை மடை பகுதி விவசாயிகளின் பாசனத்திற்கு, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட காவிரி டெல்டா கடை மடை பாசனப் பகுதிக்கு குறுவை சாகுபடிக்கு வீராணம் ஏரியிலிருந்தும், கீழணையில் இருந்தும் வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜன் வாய்க்கால், நளம்புத்தூர் 2ஆவது வாய்க்கால் வழியாக முள்ளங்குடி, நளம்புத்தூர், ஆலம்பாடி, அத்திப்பட்டு ஆகிய கிராமங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இங்கு பயி ரிடப்பட்ட பயிர்கள் நிலத்தடிநீர் உப்பாக மாறி யதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பயிர்களை பாதுகாக்க ராஜன் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண் டும். மேலும் பூதங்குடி, அள்ளுர், சாத்தமங்க லம், பரிபூரனநத்தம், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், வடபாக்கம், வாக்கூர் பூந் தோட்டம், பாளையம்சேத்தங்குடி, ஒரத்தூர், புதுப்பேட்டை, அய்யனூர் அக்கிரமங்களம் ஆகிய பகுதிகளுக்கும் ஏரியில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜூன் 12 மேட்டூரில் இந்த ஆண்டு திறக்கப் பட்டுள்ள நிலையில், தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் மோட்டார் பாசன பகுதி யில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், ஆடுமாடுகள் குடிப்பதற்கும் ஏதுவாக அமையும். எனவே காவிரி பாசனப் பகுதிக்கு வீரா ணம் ஏரியில் இருந்தும், கீழணையில் இருந்தும் தண்ணீரை திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.