கடலூர், செப். 8- கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், துணைத்தலை வர்கள் பி.கற்பனைசெல்வம், ஆர்.ராமச்சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், தலைவர் எஸ்.கே.ஏழுமலை, துணைத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பொருளாளர் கே.செல்லையா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றா ர்கள். கூட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டங்களில் சம்பா சாகுபடி செய்வ தற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது, வீராணம் ஏரியிலிருந்து அனைத்து கிளை வாய்கால்க ளிலும் தண்ணீரை பொதுப்பணித் துறை திறந்து விடவேண்டும், காலதாமத மின்றி தண்ணீரை திறந்து விட்டு சம்பா சாகுபடி தொடங்குவதற்கு வசதியை உருவாக்கிட வேண்டும், சம்பா சாகுபடிக்கு தமிழக அரசாங்கம் சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறி விக்க வேண்டும், வேளாண்மை விரிவாக்க மையங்களில் சம்பா சாகு படிக்கு தேவையான நெல், விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருட்களை மானிய விலை யில் வழங்க வேண்டும், புதிய நெல் ரகங்களை விவசாயி களுக்கு விளம்பரப்படுத்த தேவையான நடவடிக்கை களை வேளாண் துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வரும் 11ஆம் தேதி சிதம்பரம் பொதுப்பணி த்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது எனவும் முடிவு செய்ய ப்பட்டது.