கடலூர், பிப்.13- விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கும் எம்.எஸ். சாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அம லாக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலை யம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலைக்கான நிதியை குறைத்ததை கண்டித்தும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு பண பாக்கியை வழங்க வேண்டும், நெல்லிக்குப்பம் இஐடி சர்க்கரை ஆலையில் கரும்பு கழிவு ஒரு சதவீதத்திற்கு மேல் விவ சாயிகளிடம் பிடித்தம் செய்யக் கூடாது, விவ சாயத் தொழிலாளர்களுக்கு குடிமைப்பட்ட, நூறு நாள் வேலை சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. விவசாய சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட்த்தில், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், துணைத்தலைவர் பி.கற்பனைச்செல்வம், ஒன்றியத் தலைவர் ஆர்.பஞ்சாட்சரம், செயலாளர் ஆர்.வெங்க டேசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், தலை வர் எஸ்.கே.ஏழுமலை, பொருளாளர் செல் லையா, ஒன்றியத் தலைவர் வைத்திலிங்கம், பொருளாளர் ஆர்.தமிழரசன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.