tamilnadu

கடலூர் முக்கிய செய்திகள்

பணி செய்யவிடாமல் தடுத்ததாக அதிமுக பிரமுகர் மீது வழக்கு
கடலூர், டிச. 22- கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழனன்று (டிச.19) வேட்புமனுக்கள் வாபஸ் மற்றும் வேட்பாளர்க ளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடுவ தாக மனுவில் தெரிவித்த 2 நபர்களுக்கு முதலில் அக்கட்சி யின் சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் திமுகவின் சின்னத்தை கேட்டுப் பெற்றுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த அதிமுகவி னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரும் துணைஆட்சியருமான அருளரசன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, திட்டியது, கொலைமிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் அதிமுக கடலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இராம.பழனிச்சாமி, திருமாணிக்குழி சேகர் மற்றும் சிலர் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இராம.பழனிச்சாமி அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிட த்தக்கது.

பேருந்து நிலையத்தில் நகை திருடியவர் கைது
கடலூர், டிச. 22- ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள மருங்கூரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் வெள்ளிக்கிழமையன்று கடலூர் வந்திருந்தார். பிறகு வீடு திரும்புவதற்காக கடலூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். நீண்ட நேரமாக பேருந்து வராததால் அங்கேயே படுத்துள்ளார். அப்போது, இவரிடமிருந்து கைச்செயின், செல்லிடப்பேசியை நபர் ஒருவர் திருடிக்கொண்டு ஓட முயன்றார். இதனால், திடுக்கிட்டு எழுந்த மணிவண்ணன் திருடன், திருடனென கத்தியதில், பொதுமக்கள் தப்பியோடிய வரை துரத்தினர். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் திருடிச்சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்ததில், விழுப்புரம் மாவட்டம் பழையபட்டினப்பாதை பகுதியைச் சேர்ந்த விஜயமூர்த்தி (44) என்பவர் என தெரியவந்தது. இடமாற்றம் விஜயமூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது. இதனை யடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய காவலர் திருமால்வள வன் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்திலிருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டார். 

ஏ.டி.எம்மில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை வங்கியில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
தஞ்சாவூர். டிச.22–  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகன் திலீபன் (22), ஒரத்தாடு காவல் நிலையத்தில் ஊர்காவல் படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை, ஒரத்தநாடு அக்ரஹாரத்தி்ல உள்ள, கனரா வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்று ள்ளார். அப்போது ஏ.டி.எம்., இயந்திரத்தில் பத்தாயிரம் பணம் வெளியில் வந்த நிலையில் இருந்தது. இதைப் பார்த்த திலீபன் பணத்தை எடுத்துச் சென்று கனரா வங்கி மேலாளர் சேகரிடம் ஒப்படைத்தார். இச்செயலை ஒரத்தநாடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன்பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.