tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் பணி மாறுதல் ஆணைக்கு எதிர்ப்பு

சிதம்பரம், ஆக. 31- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும்  ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தமிழ கத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும்  கலை கல்லூரிகள், தொழில்நுட்பக்  கல்லூரி கள் உள்ளிட்ட இடங்களுக்கு  3 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதேபோல் தற்போது 88  ஆசிரியர் இல்லாத செமி ஸ்கில்டு ஊழி யர்களை பணி மாறுதல் செய்து உத்தர விடப்பட்டுள்ளது. இதனை ஊழியகள் வாங்க மறுத்தனர். தற்போது  கொரோனா காலம்  என்பதால்  குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று  பணியில் சேர முடியாத சூழ்நிலை உள்ளது.  எனவே இந்த பணி மாறுதலை 3 மாதம் தள்ளி  வைக்க வேண்டும் என பதிவாளரிடம் மனு  அளிக்க அவரது அலுவலகத்திற்கு சென்ற னர். பதிவாளர் இல்லை என்பதால் அனை வரும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவனை தொடர்பு கொண்டு கேட்ட  போது 3 மாதம் தள்ளிவைக்க முடியாது.  ஊழியர்கள் போக்குவரத்து இல்லை என்று அச்சமடைந்துள்ளனர். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும், போக்குவரத்தும் தொடங்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து வசதி இல்லை என்றால் சிறிது கால அவ காசத்தில் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் பணியில் சேரலாம் என்று கூறினார்.