புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம், பட்நாகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் சரோஜ்குமார் மெகர். பிஜூஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் போடப்பட்ட மோசமான சாலைளுக்காக, பொதுப் பணித்துறை இளநிலைப் பொறியாளரை, தோப்புக்கரணம் போட வைத்தது,அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியது. பல் வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதிகாரியை தோப்புக்கரணம் போட வைத்ததற் காக எம்எல்ஏ சரோஜ் குமாரை, போலீசார் கைது செய்துள்ளனர்.