tamilnadu

img

குறட்டை ஏன் வருகிறது?

இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் “கொர் கொர்” ஓசை பெரும் பாலான மக்களை அச்சுறுத்தி வருகிறது.  குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறை யின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவ தால், விடிந்ததும் பலரும் அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை.  நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர் வாழ்கிறோம். எனவே, மூக்கின் மூலம் ஏற்படும் நோய்களை யும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல், அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் மட்டுமே நோய் வரும் முன்பு உடலைப் பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்து வர்கள். ஆனால், இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாது அலட்சியப்படுத் தப்படும் பட்சத்தில் ஆபத்தை உருவாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 நிறைய பேர் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.   குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை அறியாமலேயே குறட்டை வந்து விடுகிறது.  இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு தவிக்கின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்றில் உடல் பருமன் மற்றும் குண்டான குறட்டைவிடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பெண்களில் ஏராளமான வர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, குறட்டை என்பது ஒரு கோளாறு.  தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவரு கிறது.  மூக்கின் பின்புறம் அடினாய்ட் தசையும், தொண்டைக்குள் டான்சிலும் இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதா கும்போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சை இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவரு கிறது. குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும் போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறு வார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப் போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்கு வது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் “ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்” என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்து விட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதி கரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இத யம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு களும் பாதிக்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்ச னைகளும் ஏற்படக்கூடும் என்கின்றனர் மருத்து வர்கள். இந்தியாவில் எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை குறட்டை விடுவதாக ஆய்வு கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அதிக உடல் எடை, முறையான உடற்பயிற்சி யின்மை, சாலையோரமுள்ள சுகாதாரமற்ற உணவுகள், குளிர்பானங்கள் அருந்துவது, நீண்டநேரம் தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவையும் ஒரு காரணமாகும்.

புதிய சிகிச்சைப் பிரிவு

இந்த நிலையில், தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை பிரச் சனையை கண்டறியும் புதிய சிகிச்சை பிரிவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறிந்து பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாகக் கண்டறிய உதவும் புதிய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் இரத்தத்தில்  குறைவாக செல்லக்கூடிய ஆக்சிஜன் குறைபாடு, இத யம், நுரையீரல் கோளாறுகள் மற்றும் ரத்த அழுத்தம் அனைத்தையும் கண்டறியலாம். இதில் முக்கியமாக குறட்டைக்கான கார ணங்களை கண்டுபிடித்து அதற்கேற்றார் போல சிகிச்சை வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் ரூ.5000 கட்டணம் உள்ள நிலையில் அரசு மருத்துவ மனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பரிசோதனை செய்யப்படும் .மேலும் இதன் மூலம் இசிஜி, இஇஜி, இஎன்ஜி, எஸ்பிஒ-2 பரிசோதனைகளும் செய்துகொள்ள லாம். இதேபோன்று உடல்பருமன் உள்ள வர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, இருதய கோளா றுகள் உள்ளவர்கள் இந்த தூக்க ஆய்வக பரிசோதனை மூலமாக பயன்பெறலாம். தென்தமிழகத்தில் மதுரையில் முதன்முறை யாக இந்த சிகிச்சை பிரிவு தொடங்கப்பட் டுள்ளது.