தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 5வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 13, 14 தேதிகளில் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார். பொதுச் செயலாளர் கே.கர்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.