புதுச்சேரி, ஜூலை 29- சிவப்பு அட்டை கணக் கெடுக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலா ளர் ஆர்.ராஜாங்கம் சமூக நலத் துறை அமைச்சர் கந்த சாமிக்கு கடிதம் அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: கொரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும சமீபகால மாக தினசரி 100க்கும் மேற் பட்டோர் தொற்றால் பாதிக் கப்படுகின்றனர். பொது முடக்கத்தால் பெரும் பகுதி மக்கள் வேலையிழந்து வாழ் வாதாரத்தை இழந்துள்ள னர்.
வருமானவரி வரம் பிற்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காங்கி ரஸ் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலி யுறுத்தி வருகின்றனர். எனவே அனைவரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை மத்திய, மாநில அரசு களுக்கு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2010ஆம் ஆண்டு உணவு பங்கீட்டு அட்டை வழங்கப் பட்டது. 3 லட்சத்து 44 ஆயி ரம் குடும்ப அட்டைகள் நடை முறையில் உள்ளன. இவற் றில் 1 லட்சத்து 70 ஆயிரம் சிகப்பு அட்டைதாரர்கள் உள்ளனர். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு தகுதி யான பலர் சிவப்பு அட்டை வேண்டுமென விண்ணப்பித்தும் வழங் கப்படவில்லை. மேலும் கடந்த பத்தாண்டு காலத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப் பட்டு வறுமை கோட்டுக்கு கீழே சென்றுள்ளனர். தகுதி யானவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலா ளர்களுக்கும் சிவப்பு ரேஷன் அட்டை மற்றும் உணவு தானியங்கள் வழங்க வேண் டிய பொறுப்பு அரசின் கட மையாகும். புதுச்சேரியில் தொற்று வேகமாக பரவிவரும் நிலை யில் உள்நோக்கத்தோடு சிகப்பு ரேஷன் அட்டை வைத்திருக்க கூடியவர் களை முறைப்படுத்துவ தற்காக கணக்கெடுப்பு நடத்துவதும், இந்த பணி யில் 200க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர்களை ஈடுபட செய்ய முடிவு செய்தி ருப்பதும் பொருத்தமற்ற நட வடிக்கையாகும். அரசு ஊழி யர்கள், பொதுமக்கள் நலனை கணக்கில் கொள்ளா மல் தாங்கள் மேற்கொண் டுள்ள இந்த நடவடிக்கையை கைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.