tamilnadu

img

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிப்பதா?

விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, ஏப்.29- தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்திய மக்களுடைய கவனம் முழுவதும் கொரோனா நெருக்கடி யிலிருந்து எவ்வாறு மீள்வது என்ப தில் இருக்கிறது. ஆனால், மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகா ரத்தைப் பறிக்கும் வகையில் சட்ட விரோத உத்தரவை 27.4.2020 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டுள் ளது. மத்திய அரசின் இந்த நடவ டிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தனது வன்மையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசின் நிர்வாகப் பணி கள் ஒதுக்கீட்டு விதிகள் 1961ல் திருத் தங்கள் செய்வது என்ற பெயரில் மத் திய அரசின் நீர்வள அமைச்சகம் தொடர்பான திருத்த விதிகளை 27.4. 2020ல் இந்திய குடியரசுத் தலைவ ரின் ஆணை S.O/1371E/24.4.2020 வழியே அரசிதழில் வெளியிட்டுள் ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணை யம் உட்பட பல நதிநீர் சம்பந்தமான தன்னாட்சி அமைப்புகளை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வரும் வகையில் 33E என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட் டுள்ளது.

அது மட்டுமல்லாமல் 7A என்ற பிரிவு இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம் படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் மாசுபடுவதை தடுப்பது ஆகிய அதிகாரங்களை மத்திய நீர்வளத்துறைக்கு அளிக்கிறது. மாநில அரசுகளின் ஆற்றுநீர் மேலா ண்மை தொடர்பான அனைத்து அதி காரங்களையும் சத்தமில்லாமல் மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ள தாகவே கருத வேண்டியுள்ளது. மத் திய அரசின் இந்த சட்டதிருத்தம் அதன் எதேச்சதிகாரப் போக்கிற்கு எடுத்துக்காட்டாகும்.

காவிரி தொடர்பான நடு வர்மன்ற தீர்ப்பு, நடுவர்மன்ற தீர்ப்பு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்பாக செயல்பட வேண்டு மென்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட சட்டப்போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்புக்கு மத் திய அரசின் இந்த உத்தரவு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள் ளது. எனவே, இதுகுறித்த உரிய விளக்கத்தை தமிழக விவசாயி களுக்கு மத்திய – மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

காவிரி மேலாண்மை ஆணை யத்தின் தன்னாட்சி உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அர சின் இந்த நடவடிக்கை இருக்குமா னால் வலுமிக்க கண்டன போராட்டங் களை நடத்திட தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.