tamilnadu

img

பழுதடைந்த சாலையை செப்பனிடுக - சிஐடியு கோரிக்கை

உதகை, ஆக. 21 - மசினகுடி மின்வாரிய முகாமிற்கு செல்லும் பழுதடைந்த சாலையை செப்பனிட வேண்டும் என சிஐடியு தொழிற் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மசினகுடியில்  புஷப் மின் ஊழியர் குடியி ருப்பில் 80க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும், அப்பகுதியில் மின் ஊழியர் கூட்டுறவு நல சங்கம், மருத்து வமனை மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஊராட்சி நிர்வாகத்தால் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இத னால் இந்த சாலையில்  வாகனங்களில் பய ணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை போர்க்கால அடிப்படை யில் செப்பனிட வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் வெள்ளி யன்று ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.