tamilnadu

img

புதுச்சேரி பிரதேசத்தில் பாலியல் தொந்தரவு செய்த கால்நடை அதிகாரியின் மனு தள்ளுபடி!

நீதிமன்ற உத்தரவுக்கு  மாதர் சங்கம் வரவேற்பு

சென்னை, அக்.23-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: புதுச்சேரியில் கால்நடைத்துறை அதி காரியாக இருக்கும் மருத்துவர் பத்மநாபன், அத்துறையில் பணிபுரியும் பல பெண் ஊழி யர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவர், கால்நடைத்துறையில் பணி யிடப் பாலியல் புகார்களை விசாரிக்கும் ‘விசாகா கமிட்டி’ இல்லாததால் புதுச்சேரி ஆளுநருக்கு புகார் கொடுத்துள்ளார். புகார் மீதான நடவடிக்கை மேற்கொள்ள, சேர்மனாக இருக்கும் வித்யாராம் குமார் தலைமையிலான மாவட்ட விசாரணை குழுவிற்கு (டிஎல்சி) விசாரணை நடத்துவ தற்காக பரிந்துரைக்கப்பட்டது. டிஎல்சியின் விசாரணையும் துவங்கியது. 

இந்நிலையில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பத்மநாபன், மேற்படி விசார ணையை  நிறுத்தி வைக்க வேண்டும் என்றும்,வித்யா ராம் குமார் விசாரிக்கக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தி ற்கு மனு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவரது மனுவை தள்ளு படி செய்தது.  இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் உரிய நேரத்தில் விசாரணை நடக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடிய சூழ்நிலையில், தகவலறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுவை பிரதேச குழு தலை யிட்டு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி பணி புரியக்கூடிய  கால்நடைத்துறை அலுவல கத்திற்கு முன்னால் முற்றுகைப் போராட் டத்தை நடத்தினார்கள்.  போராட்டத்தின் நியாயம் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவ டிக்கை எடுப்பதற்கு மாறாக, போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  புதுவை பிரதேச தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டது காவல்துறை. இந்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பத்மநாபனின் மனு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் அவரு டைய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தற்போது  விசாரணை அதிகாரி யாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்கரெட் நிய மிக்கப்பட்டுள்ளார். பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பத்மநாபன், உடனடியாக டிஎல்சி விசாரணைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 28 அன்று பிறப்பித்தது.

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்?

பொதுவாக பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக விசாகா கமிட்டி (உள் விசாரணைக் குழு)அரசு மற்றும் தனியார் துறைகளில் அமைக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தும் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு சில துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகளில் விசாகா கமிட்டி இல்லை. பெண்களை பணியிடங்களில் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை முறையாக  அமல்படுத்தினால் தான் பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும். உயரதிகாரிகள் மற்றும் சக  ஊழி யர்களால்  தங்களுக்கு ஏற்படும் பாலியல்  தொல்லைகளால் மிகுந்த மன உளைச்சலு க்கு  பெரும்பாலான பெண்கள்  ஆளாகி வரும் சூழலில் உயர் நீதிமன்ற உத்தரவு மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.பணி புரியும் பெண்களுக்கு நம்பிக்கை அளிப்ப தாகவும் உள்ளது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக் குழு சார்பாக உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். 

உறுதியுடன் நின்று சாட்சியம் அளித்து போராடி வரும் பெண் மருத்துவர் மற்றும் ஆதரவாக நிற்கும் ஊழியர்களையும் பாராட்டுகிறோம். சிறப்புமிக்க இந்த உத்தரவை வழங்கிய நீதிபதிக்கும் வழக்க றிஞர்  ஸ்டாலின் அபிமன்யு அவர்களுக்கும் பெண் மருத்துவருக்கு ஆதரவாக தொ டர்ந்து தலையீடு செய்துவரும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுவை பிரதேச குழுவையும் அதன் நிர்வாகிகளான பிரதேச தலைவர் வு.சந்திரா, பிரதேச செய லாளர் இ.சத்தியா, இளவரசி உள்ளிட்டோ ருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  தற்போது அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசா ரணைக் குழு உடனடியாக விசாரணை நடத்தி  பாலியல் குற்றத்திற்கான தண்டனை யை பெற்றுத் தருவதற்கான முயற்சியை யும் மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பாலியல் தொல்லையால் புகார் கொடுத்துள்ள பெண் மருத்துவர் மட்டுமல்ல, அங்கு பணிபுரியும் பல்வேறு பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத் துள்ளது. எனவே, பாலியல் புகார் கமிட்டி அனைத்து துறைகளிலும் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள  வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்ப தற்கான நடவடிக்கைகளை உடனடியாக புதுவை பிரதேச அரசும் நீதித்துறையும் எடுக்க வேண்டும்.