tamilnadu

img

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பூசாரி ஒருவரின் தாயார் கொரோனா பாதிப்பால் மரணம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பூசாரி ஒருவரின் தாயார் கொரோனா பாதிப்பால் மரணமடைந்த நிலையில், கோவில் அமைந்துள்ள பகுதி உள்பட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திலும், உட்புறத்திலும் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே, சனிக்கிழமை மாலை மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.