tamilnadu

img

அமைச்சரின் உதவியாளர் துப்பாக்கி முனையில் கடத்தல்

உடுமலை:
உடுமலை அருகே தாந்தோணி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவரின் இளைய மகனான கர்ணன் (எ) கனகராஜ் கடந்த 7 ஆண்டுகளாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணனிடம் உதவியாளராக  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் புதனன்று காலை 11 மணி அளவில் உடுமலை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கர்ணன் (எ) கனகராஜ் இருந்தபோது காரில் வந்திறங்கிய மர்மநபர்கள் சிலர் அவரை கத்தி மற்றும்துப்பாக்கியை காட்டி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.  இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் தீவிர விசாரணை நடத்தி, கடத்தப்பட்ட அமைச்சரின் உதவியாளரை மீட்கும் பணியில் ஈடுபட்டார். இதற்கிடையே, கடத்தப்பட்ட அமைச்சரின் உதவியாளர் கர்ணனை, கடத்தி சென்ற மர்ம நபர்கள் உடுமலை அருகேயுள்ள தளி என்னும் பகுதியில் இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து கோவை சரக டிஐஜி நரேந்திர நாயர், மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் திசா மிட்டல் ஆகியோர் மீட்கப்பட்ட கர்ணனிடம் விசாரணை நடத்தினர்.

;