tamilnadu

img

வேலைகிடைத்தால் கடவுளுக்கு உயிர்காணிக்கை: வங்கி மேலாளர் தற்கொலை

கன்னியாகுமரியில் முட நம்பிக்கை காரணமாக வேலை கிடைத்தால் கடவுளுக்கு உயிர் காணிக்கை தருவதாக வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கன்னியாக்குமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியை சேர்ந்த செல்லசுவாமி மகன் நவின். பொறியியல் படித்திருந்த நிலையில் நீண்ட நாட்கள் வேலைகிடைக்கவில்லை. இந்நிலையில் வங்கித் தேர்வு எழுதி இருந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் இருந்த பாங்க் ஆப் இந்தியாவில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் 15 நாட்களுக்கு பின் மும்பையிலிருந்து நேற்று விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தவர் அங்கிருந்து மார்த்தாண்டத்துக்குச் சென்று தனது நண்பரை சந்தித்தார். பின்னர் சகோதரியிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். பின்னர் நாகர் கோயில் வந்த நவீன்  புத்தேரியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு கன்னியாக்குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில் போலீசாருக்கு கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் வேலை கிடைத்தால் நேர்த்திக் கடனாக தன்னுயிரை விடுவதாக எழுதியிருப்பதை காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
அந்த கடிதத்தில் அன்புள்ள அப்பா அம்மா... “நான் பல காலம் வேலை இல்லாமல் இருந்தேன். எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் எங்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே வேலை கிடைத்தால் என் உயிரையே காணிக்கையாகத் தருவதாக இறைவனிடம் வேண்டினேன். பின் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்தது. எனவே என் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடம் நான் செல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.