சிபிஎம் இரங்கல்
சென்னை, அக். 30 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேரா.கே.எம்.காதர் மொகிதீன் அவர்களது மனைவி லதீஃபா பேகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு: இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களது துணைவியார் லதீஃபா பேகம் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சிறுபான்மை மக்களது உரி மைகளுக்காகவும், நாட்டில் ஜனநாயகம் மற்றும் மதச்சார் பின்மை ஆகியவைகளை பாது காத்திட அரும்பணியாற்றி வரும் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களது அரசியல் பணிக்கும், குடும்ப வாழ்வுக்கும் உறுதுணை யாக இருந்தவர் லதீஃபா பேகம் அவர்கள். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் அன்புத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்து அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.