tamilnadu

img

ஜெயலலிதாவின் கைரேகை பதிவு விவகாரம்: சிபிஐயிடம் திமுக மனு

சென்னை, அக். 18- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை  விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்கக் கோரி, திருப்ப ரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவ லகத்தில் மனு அளித்துள்ளார். 2016ஆம் ஆண்டு திருப்ப ரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது, அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வேட்பு மனுவின், பி வடிவத்தில், ஏ.கே. போஸ் வேட்பாளராக முன்மொழி யப்பட்டு, அதில் ஜெயலலிதா கைரேகை இடப்பட்டிருந்தது. சுயநினைவு இல்லாமல் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைத்திருக்க முடியும் என்று திமுக வேட்பாளர் சர வணன் தொடர்ந்த வழக்கை விசா ரித்த உயர்நீதிமன்றம், ஜெய லலிதாவின் கைரேகை சந்தேகத் திற்குரியதாக இருப்பதாகவும், சட்டவிரோதமானது என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், தில்லி யில் உள்ள சிபிஐ தலைமை  அலுவலகத்தில் அளிக்கப் பட்டுள்ள மனுவில், முறைகேடாக பெறப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகையை அங்கீகரிக்கச் செய்த அப்போதைய தலைமை  தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மதுரை மாவட்ட தேர்தல்  அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்திய அதிகாரி ஜீவா மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என திமுக எம்எல்ஏ  சரவணன் கேட்டுக்கொண்டுள் ளார். அரசு மருத்துவர் பாலாஜி, அப்பல்லோ மருத்துவர்கள் பாபு, ஆப்ரஹாம், மற்றும் சசிகலா, அதிமுக அவைத் தலை வர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.