சென்னை, டிச. 10- வெங்காய பதுக்கலைத் தடுக்க மாநிலம் முழுவதும் 33 குழுக்கள் அதிரடி ஆய்வில் ஈடு பட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு எஸ்.பி.சாந்தி தெரிவித்திருக்கி றார். வெங்காயத்தைப் பதுக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தில் அதன் காவல் கண்காணிப்பாளர் சாந்தி செய்தியாளர்க ளைச் சந்தித்தார். அப்போது, வெங்காய விலை அதிகரித்துள்ள சூழலில், வியாபாரி கள் வெங்காயப் பதுக்கலில் ஈடுபடு கிறார்களா என்பதைக் கண்டறியக் குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி சார்பில், 33 குழுக்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது” என்றார். வெங்காயப் பதுக்கலில் ஈடுபடும் வியா பாரிகள் மீது அத்தியாவசிய பண்டக சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன்படி, அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனையும், கடை உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும், எஸ்.பி சாந்தி எச்சரித்திருக்கிறார். சென்னையைப் பொறுத்தவரை வெங்காய பதுக்கல் நடைபெறுவதாக தெரிந் தால் பொதுமக்கள் 98409-79669 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றார். இதுவரை, வெங்காயப் பதுக்கல் தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப் படவில்லை என்றும், அவ்வாறு புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு எஸ்.பி .சாந்தி கூறியிருக்கிறார். அன்றன்றைக்கு தாங்கள் வாங்கும் வெங்காயத்தை, அன்றன்றைக்கே, வியா பாரிகள் விற்றுவிட வேண்டும் என்றும், பதுக்கி வைக்கக் கூடாது என்றும் எஸ்.பி. சாந்தி அறிவுறுத்தியிருக்கிறார்.
500 டன் வெங்காயம்
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் , மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 500 மெட்ரிக் டன் வெங்காயம் வந்துகொண்டு இருக்கிறது என்றும் 13, 14ஆம் தேதிகளில் அவற்றை குறைந்த விலைக்கு நியாயவிலைக் கடை கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது” என்றார். அரசின் பசுமைப்பண்ணை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.