சென்னை,மார்ச் 5- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிபிசிஐடி காவல்துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார் கள். இந்த தேர்வுகளில் மோசடியில் ஈடு பட்டது தொடர்பாக சுமார் 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. ஊழியரான ஓம்காந் தன், முகப்பேரைச் சேர்ந்த தரகர் ஜெயக் குமார் ஆகியோர் கூட்டாக தேர்வு முறை கேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய் யப்பட்டனர்.
இந்த நிலையில் 4-வதாக குரூப்-2 தேர்வி லும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு மையத்தை தேர்வு செய்து மோசடியில் ஈடு பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளி யாகியுள்ளது. நாகர்கோவில் மையத்தில் தேர்வு எழு திய 4 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்று சென்னை மற்றும் மதுரையில் அரசு அதி காரிகளாக பணியாற்றி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ள சிபிசிஐடி காவலர்கள் 4 பேரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரை யும் காவல்துறையினர் அடுத்தடுத்து காவ லில் எடுத்து விசாரணை நடத்தினர். தற்போ தும் இருவரும் போலீஸ் காவலில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில்தான் புதிதாக குரூப்-2 தேர்விலும் மோசடி நடைபெற்று இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.