சென்னை,ஜூலை 1- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, குடி நீர் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்க ளின் தண்ணீர் பிரச்சனையையும் தமிழக அரசையும் கொச்சைப் படுத்தி ட்விட்டரில் கருத்து தெரி வித்த புதுவை துணை நிலை ஆளு நர் கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது, சட்டத்துறை அமைச்சர் குறுக்கிட்டதால் எதிர்க் கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்க ளும் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனால் பேரவையில் சிறிதுநேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உறுப்பினர்களின் இந்த செயலுக்கு பேரவைத் தலைவர் ப. தனபால் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதுவை ஆளுநர் கடு மையாக விமர்சித்தார். ஆனால், ஆளுநர் குறித்து விவாதிக்க விதி யின்படி அனுமதி இல்லை என்ப தால், ஸ்டாலின், அமைச்சர் சண்முகம் பேசியது அனைத்தை யும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கு வதாக பேரவைத் தலைவர் தன பால் அறிவித்தார். மீண்டும் குறுக்கிட்ட ஸ்டா லின், ஆளுநர் குறித்து தான் எந்த கருத்தையும் கூறவில்லை. அவர் கூறியது நாளேடுகளிலும், வந்துள்ளதை மட்டுமே தாம் தெரிவிப்பதாக கூறினார். ஆனா லும் பேரவைத் தலைவர் அனு மதிக்கவில்லை. ஆளுநர் கிரண் பேடி கூறிய கருத்து எங்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால் வெளிநடப்பு செய்வதாக ஸ்டா லின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேட்டி
வெளி நடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்,“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்ச னைக்கு, புதுவை ஆளுநர் கிரண்பேடி தான் ஒரு ஆளுநர் என்பதையும் மறந்து தமிழக அரசையும் தமிழக மக்களையும் வரம்பு மீறி கொச்சைப்படுத்தும் விதமாக அநாகரிகமாக கடுமை யாக விமர்சனம் செய்திருந்தார். தமிழக மக்கள் கோழைகள் என்று தெரிவித்திருப்பது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபையில் கூறினோம். ஆனால் அதை பற்றி பேச இந்த அரசு மறுக்கிறது. இதன் மூலம் கிரண் பேடி கருத்தை இந்த அரசு ஏற்பதாகவே தெரிகிறது. எனவே வெளிநடப்பு செய்தோம்” என்றார். தமிழக மக்களை கொச்சைப் படுத்தி, கேவலமாக பேசிய ஆளு நரை கண்டித்து தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.